உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் மருந்துகள் தயாரிக்கும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளும் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. அதில் ஒன்று மாடர்னா நிறுவனமும், மற்றொன்று ஃபைஸர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பாகும்.
இந்நிலையில் ஃபைஸர் தயாரித்த கோவிட் -19 தடுப்பூசி மூன்றாம் நிலை மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது 90 சதவீத மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி, ஊடகங்களில் பெரும் ஆரவாரத்தையும், நம்பிக்கை வெளிச்சத்தையும் அளித்துள்ளது. பொதுமக்களின் நம்பிக்கையை நாம் தவறாக கூறமுடியாது. ஆனால் அதைப் பயன்படுத்தி எந்த ஒரு நிறுவனமும் லாபம் ஈட்ட முனைவதை ஏற்கமுடியாது. உண்மையில் ஒரு விரைவான தீர்வை தேடுவதற்கான நேரம் இது என்பதையும் தாண்டி முழு உலகத்திலும் மனித நேயத்தை வெளிக்காட்டுவதற்கான தருணமாகவும் இருக்கிறது.
சோதனைகளின் இதே கட்டங்களில் உள்ள மற்ற தடுப்பூசிகளின் இருப்பை ;நிராகரித்தது, குறிப்பிட்ட நிறுவனத்தின் தடுப்பூசிகளை மட்டும் ஊடகங்களில் பெரிதாக பேசுவதன் மூலம் அதன் வியாபார நோக்கம் வெளிப்படையாக உள்ளது.. ஒரே ஒரு நிறுவனத்தால் ஒட்டுமொத்த உலகத்தின் நெருக்கடிநிலையை முற்றிலும் தீர்க்க முடியாது., உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் இலாப நோக்கற்ற மனிதாபிமானம் மட்டுமே இன்றைய பேரிடரை தீர்க்கும். அமெரிக்காவில், மருந்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முதன்மையானது. அதைகருத்தில் கொள்ளாமல் எதார்த்த களநிலை வணிகத்தின் மேகமூட்டத்தில் மறைய அனுமதிக்க வேண்டாம்.
பெரிய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் எப்போதும் சாதாரண மக்களின் தேவைகளை முன்வைத்தே கொண்டுவரப்படுகின்றன.
மேலும் தரமான தயாரிப்பு சலுகை என்பதை விட ஒரு உரிமை. கார்ப்பரேட் ஏகபோகத்திற்கு இது ஒரு சவாலாக உள்ளது. இங்கு இலாபங்கள் முதலிடத்திலும், மக்கள் நலன் கடைசியாகவும் உள்ளன, அதனால்தான் தடையற்ற முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் “வரையறுக்கப்பட்ட அரசாங்கத்தின்” முன்மாதிரியைப் பயன்படுத்தும் குடியரசுக் கட்சியினரால். ஒபாமா கேர் போன்ற சுகாதார காப்பீட்டில் உள்ள சமரசங்கள் கூட குடியரசுக் கட்சியினரால் கடுமையாக கேலி செய்யப்படுகின்றன, நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட ஒரு மருந்து நிறுவனமான ஃபைசர் நிறுவனம் இந்த சுகாதார நிறுவன ஏகபோகத்தின் ஒரு அம்சமாகும். இந்த ஏகபோகத்தின் பாதுகாப்பைவிட உலகம் முக்கியமானது.
2021 ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் அளவில் தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. 7.8 பில்லியன் மக்கள் வாழும் இந்த உலகில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற வளர்ச்சியடையாத பகுதிகளுக்கும் இந்நிறுவனம் தான் தயாரித்த தடுப்பூசியை விநியோகிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இத்தடுப்பூசியின் உற்பத்தி, விநியோகம் மற்றும், மிக முக்கியமாக, அதன் செயல்திறன் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. ஃபைசர் சோதனை நான்கு மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது, மேலும் தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பை வழங்கும், எத்தனை பேர் பயனடைவார்கள் என்பது இப்போது அறியப்படாதவையாக உள்ளது. இதனிடையே இத்தடுப்பூசி நிச்சயம் வசதிப்படைத்தவர்களுக்கு மட்டுமான வாய்ப்பாக மாறக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
3 வது நிலை தடுப்பூசி மருத்துவ சோதனைகளில் பல நாடுகள் வெற்றியடைந்துள்ள நிலையில் அமெரிக்க நிறுவனத்தை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துவதன் மூலமும் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி விநியோகத்திட்டத்தை அமெரிக்கா நிராகரித்திருப்பதன் மூலமும் அதன் வணிக நோக்கம் வெட்ட வெளிச்சமாகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சீன தடுப்பூசியை மாதிரி ஒப்பாக பயன்படுத்தினர். ஆனால் ஊடகங்களில் அது பேசப்படவில்லை. தற்போது அமெரிக்கா தன் மருத்துவ ஏகபோகத்தை காட்டவிளைகிறது.
இந்த ஆண்டு சீனா-ஆபிரிக்க உச்சிமாநாட்டிலும், உலக சுகாதார மாநாட்டிலும் சீன அதிபர் ஷிச்சின்பிங் சீனா, அதன் தடுப்பூசிகளை நன்கொடையாக கொடுப்பதன் மூலம் வளரும் நாடுகளுக்கு உதவ விரும்புவதாக உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.
உலகளாவிய சுகாதார பேரிடர் விசயத்தில் எந்த ஒரு நாடும் தனியாக உலகின் துயரை துடைத்து விட முடியாது. அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ள செய்தி கொடூரமான 2020 ஆண்டின் ஒருநல்ல செய்தி என்றாலும், அது பணக்காரர்களுக்கான ஒன்றாக மட்டுமே உள்ளது. மனித நேயம் அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமலை சோமு
Excellent article
Very useful messages are found in this article. More over the article and the author stands for the world peace.