வயலில் நெற்கதிர்கள்/
நிறைந்து வழிந்தன/
நிறையவில்லை வயிறு/
சாலைகளில் உழவர்கள்..
உன்னையே அறிவாய் /
இதுவே தத்துவம்/
சொன்னவரை அறிந்தனர் /
சிறைபிடித்த பின்னர் ..
ஒற்றைச் சிறகு /
வீழ்ந்தது கீழே/
இறகு உண்டு/
கண்டங்கள் தாண்டு ..
கண்ணின் கருவிழி/
நீயே என்றான்/
இருள் சூழ/
தவிக்க விட்டான்..
முகத்தில் பரு/
பதின்ம வயது /
பருத்த உடல்/
நடுத்தர வயது ..
உதிர்ந்தன இலைகள்/
இலையுதிர் காலம்/
உதிரா நினைவுகள்/
இளமைக் காலம் ..
கூதிர் காற்று/
குளிர்ந்தது உடல்/
கூர்மை பார்வை/
அனலாகும் கூட்டம் ..

- வழக்கறிஞர் ம.வீ. கனிமொழி
வெர்ஜினியா, அமெரிக்கா
கவிதைகள் அருமை
தொடரட்டும் தங்கள் கவிதைப்பணி நீலகண்ட தமிழன் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா