மெரினா கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

Estimated read time 1 min read

பொங்கல் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் காலையில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர். தாங்கள் கொண்டு வந்திருந்த உணவு பொருட்களை கடற்கரையில் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர். சிறுவர்-சிறுமிகள் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.

கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அண்ணா சமாதியில் இருந்து பட்டினப்பாக்கம் வரை சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author