தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்  

Estimated read time 1 min read

திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு திசை காற்றின் மாறுபாடுகள் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29-30° செல்சியஸ் மற்றும் 23-24° செல்சியஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author