தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் நடிகருமானவர் சுந்தர் சி. இவரது நடிப்பில் வல்லான் திரைப்படம் கடந்த 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வல்லான் திரைப்படத்தில் சுந்தர் சி காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் இரண்டு சிறுமிகள் உயிருக்கு ஆபத்தான முறையில் விளையாட்டில் ஈடுபடும் காட்சி அமைந்துள்ளது.