திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்ப உற்சவ விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Estimated read time 1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவத்தின் 3-ம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9-ம் தேதி தெப்ப உற்சவம் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து தங்க வைர ஆபரணங்களில் சுவாமி பல்லக்கில் அழைத்து வரப்பட்டார்.

பின்னர் தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்ட மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கண்களை கவரும் வண்ண மின் விளக்குகள், மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி உலா வந்ததை பக்தர்கள் புஷ்கரணி வளாகத்தில் இருந்தபடி வழிபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author