ஏப்-1 முதல் அமலாகும் புதிய வரிமுறை…. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்..? முழு விவரம் இதோ…!! 

Estimated read time 0 min read

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நடப்பு நியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு இறக்குமதி பொருள்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வழிமுறைகளானது வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து இந்தியாவில் எந்தெந்த பொருட்களுக்கான வேலைகள் குறைய வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம். அதாவது மத்திய பட்ஜெட்டில் மொபைல் போன் பேட்டரிகள் மற்றும் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் திறந்த செல்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே மின்னணு சாதனங்கள், மொபைல் போன், எல்இடி, எல்சிடி வகை தொலைக்காட்சிகளின் விலைகள் குறைய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கமாக எலெக்ட்ரிக் பேட்டரிகளின் இறக்குமதி வரியானது குறைகிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும். அதுமட்டுமின்றி மருத்துவ உபகரணங்கள், புற்றுநோய் உட்பட பல மருந்து பொருட்கள், தோள் மற்றும் கப்பல் கட்டுமானத்திற்கு பயன்படும் மூலப் பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகளுக்கான விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author