2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்! – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Estimated read time 1 min read

2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை சேர்ந்தவரை நிலவில் இறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

விண்ணிற்கு மனிதனை அனுப்பி, மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் ககன்யா திட்டம் தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் அதில் பயணிக்கும் மனிதர்களுக்கு பயிற்சியும் இஸ்ரோ சார்பில் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் வருகிற 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன் (Space Station) அமைக்கவும், 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை சேர்ந்தவரை நிலவில் இறக்கவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாகவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author