மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலுக்கு கடந்த 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்களின் வருகையும் சுமார் 1.5 லட்சம் குறைந்ததாக தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.