நாகை வடகாலத்தூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!

Estimated read time 0 min read

நாகையில் உள்ள உச்சமா காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் இணைந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டி வேண்டுதலை நிறைவேற்றினர்.

உச்சமா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்துகொண்டு வாழ்வாதாரம் செழிக்க வேண்டி மனமுருகி அம்பாளை வேண்டிக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து காளியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் நாகை வடகாலத்தூரில் உள்ள மற்றொரு கோயிலான ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author