புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள்

Estimated read time 0 min read

வந்தவாசி, ஜன 02:

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயில், ஜலகண்டேஸ்வரர் கோவில், கோதண்டராமர் கோயில், மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மற்றும் தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் இராஜ அலங்காரத்தில் மூல மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். புத்தாண்டையொட்டி கோவில்களில் வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author