முத்துமாரியம்மன் அமாவாசை சிறப்பு பூஜைகள்

Estimated read time 0 min read

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மூல மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இரவு அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது.

பிறகு உற்சவ மூர்த்தி அம்மன் மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் பவனி வந்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பூஜைகளை சக்தி உபாசகர் அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் மேற்கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author