வந்தவாசி கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற அனுமந்த ஜெயந்தி விழா

வந்தவாசி, ஜன 11:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் இன்று 63 ஆம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மூல மூர்த்திகள் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நடந்தேறியது. டாக்டர் எஸ். குமார், நாதமுனி வைணவ சபை தலைவர் கு. மணிவண்ண ராமானுஜர், முத்து ராமானுஜதாசர் உள்ளிட்டோர் பங்கேற்று திருப்பாவை பாசுரங்களை பாடினர். மாம்பட்டு பெ. பார்த்திபன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.

மேலும் நாதஸ்வர வித்துவான் கே.பி. ஆறுமுகம் குழுவினர் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இந்த அனுமந்த ஜெயந்தி விழாவை எல்.என். சீனிவாச ஐயங்கார் ஒருங்கிணைத்து நடத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author