வந்தவாசி, ஜன 10:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் பால் தயிர் இளநீர் சந்தனம் நெய் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தேறியது. இதில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உற்சவ மூர்த்தி கோவில் பிரகாரத்தில் மேள தாளத்துடன் பவனி வந்தார். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.