ஸ்ரீஐயப்ப சேவா சமாஜம் சார்பாக திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா

Estimated read time 0 min read

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக ஸ்ரீசெல்வகணபதி திருக்கோவிலில் நகர் நல கமிட்டி தலைவர் மோகன்தாஸ் தலைமையிலும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேந்திரன் முன்னிலையில் உலக மக்களின் நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையும், அதனை தொடர்ந்து அன்னதான விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் மற்றும் சேவா சமாஜம் தலைவர் சரவணன், துணைத்தலைவர் ராஜலிங்கம், செயலாளர் மணிமாறன், துணை செயலாளர் தங்கபாண்டி, பொருளாளர் சரவணன் மற்றும் சபரிமலை ஸ்ரீஐயப்ப சேவா சமாஜம் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author