அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் : போட்டியின்றி தேர்வான 10 பாஜக வேட்பாளர்கள்!

Estimated read time 1 min read

அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி எம்எல்ஏ-வாக தேர்வானதாக, அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன், மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு உள்ள 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், 60 சட்டசபை தொகுதிகளுக்கும், வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனை அடுத்து, வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதலமைச்சர் சவுனா மெய்ன் உட்பட பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும், 10 தொகுதிகளில் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால், பாஜக வேட்பாளர்கள் 10 பேரும் போட்டியின்றி, எம்எல்ஏ-வாக தேர்வானதாக, அம்மாநிலத் தேர்தல் அதிகாரி பவன் குமார் அறிவித்துள்ளார்.

மொத்தமுள்ள 60 தொகுதிகளில், இந்த 10 தொகுதிகளைத் தவிர்த்து, மீதமுள்ள 50 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும், ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அம்மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author