தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 163 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 874ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.
இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,26,775) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,33,461ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 2 உயிரிழப்புகள் பதிவாகி இருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர ‘சுகாதாரக் குறியீடு’ கூறியுள்ளது.