இந்தியாவுக்கு ரூ.33 ஆயிரம் கோடியில் 31 அதிநவீன டிரோன்கள் சப்ளை

Estimated read time 1 min read

இந்தியாவிற்கு ரூ.33 ஆயிரம் கோடியில் 31 அதிநவீன டிரோன்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் 31 ஆயுத டிரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இந்நிலையில் சமீபத்தில் காலீஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல நடந்த சதி திட்டத்தில் இந்திய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகின்றது. விசாரணை நிலுவையில் இருப்பதால் இந்தியாவிற்கு ஆயுத டிரோன் விற்பனை செய்வதற்கான முன்மொழிவை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ரூ.33 ஆயிரம் கோடியில் 31 அதிநவீன டிரோன்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author