இருதரப்பிலும் உள்ள “பிரச்சனைகளை” தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு முழு உலகிற்கும் முக்கியமானது என்று பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூஸ் வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது இருதரப்பு தொடர்புகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து, நமது எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை,” என்று பிரதமர் மோடி கூறினார்.