எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு : தீவிரவாதி பலி!

Estimated read time 0 min read

ஜம்மு பகுதியில் உள்ள அக்னூர் செக்டார் பகுதியில்  ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.

ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர்  மீது  பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலை அடுத்து சர்வதேச எல்லை கோட்டு பகுதி  உஷார் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்னூர் பகுதியில் உள்ள இந்திய எல்லைக்குள் 4 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றது ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் அனைவரும் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் தள்ளப்பட்டதாகவும், அவர்கள்  ஒரு உடலை இழுத்துச் சென்றதாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த உடல் ஊடுருவ முயன்ற நான்கு பயங்கரவாதிகளில் ஒருவனின் சடலம் என நம்பப்படுகிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author