காந்திநகர்: குஜராத்தில் உள்ளூர் மது அருந்தி இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் லிஹோடா கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் தாக்கூர் (35) மற்றும் கானாஜி ஜாலா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மெத்தில் ஆல்கஹால் இல்லை என்று தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கை கிடைத்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ரவிதேஜா வாசம்செட்டி தெரிவித்தார். மேலும் பல தகவல்கள் வெளிவர உள்ளதாகவும், அதன் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மதுபானங்களை தொழிலாளிகளுக்கு விற்பனை செய்த நபரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.