ஜம்மு – காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!

Estimated read time 0 min read

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் பகுதியில், இன்று 3.8 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. கிஷ்துவார் பகுதியில், மதியம் 2.53 மணிக்கு, 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிஷ்துவார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author