ஜம்மு–காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு!

Estimated read time 0 min read

ஜம்மு – காஷ்மீரில் இன்று முற்பகல் 11.57 மணியளவில், 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிஷ்த்வார் பகுதியில் இன்று முற்பகல் 11.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 5 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கிஷ்த்வார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடங்கள் லேசாக குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author