ஜார்கண்ட் புதிய முதல்வர் கல்பனா?

Estimated read time 1 min read

ஜார்கண்ட் மாநிலத்தில் நிலமோசடி தொடர்பாக 600 கோடி ரூபாய் அளவில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த விவகாரத்தில் உடனே வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல் வெளியானது.

இதனை உறுதி செய்த அமலாக்கத்துறையினர் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் பல முறை சம்மன் அனுப்பினர். ஆனால், ஆஜராகவில்லை.

இந்த நிலையில், கடந்த 20 -ம் தேதி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஜனவரி 27 -ம் தேதி முதல் 31 -ம் தேதிக்குள் மீண்டும் நேரில் ஆஜராக ஹேமந்த் சோரனுக்கு அறிவுறுத்தினர்.

ஆனால், அமலாக்கத்துறை கொடுத்த சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் ஹேமந்த் சோரன். ஆனால் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்களிலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஹேமந்த் சோரனின் டெல்லியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டிலிருந்து 36 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதனிடையே, ஹேமந்த் சோரன் தலைமறைவாகி விட்டார் என்றும் தகவல் வெளியானது.

நீதிமன்றங்களில் அமலாக்கத்துறைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அப்போது அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனா முதல்வராக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜார்கண்ட் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் உடன் அவசர ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author