இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், ஜூன் 1 முதல் புதிய ஓட்டுநர் லைசன்ஸ் விதிகள் இந்தியாவில் அமலுக்கு வருகிறது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஜூன் 1 முதல் புதிய விதிகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது.
ஆவணமாக்கல் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறும் செயல்முறைகள் எளிமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பு செய்யப்படும் ஓட்டுநர் சோதனைகள் விருப்ப தேர்வாக மாற்றப்பட உள்ளது என்பது இந்த புதிய விதிகளின் ஒரு சிறப்பம்சமாகும்.