டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கியது செய்யப்பட்ட பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதாவின் நீதிமன்ற காவலை மே 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதன் விசாரணை தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த ஆறாவது கூடுதல் குற்றப்பத்திரிகையை பரிசீலித்து வாதங்களை விசாரிப்பதை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த வெள்ளிக்கிழமை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கிட்டத்தட்ட 200 பக்க வழக்கு குற்றப்பத்திரிகையை ED தாக்கல் செய்தது.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, ஆம் ஆத்மி கட்சி தொடர்புடைய பணமோசடி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்