தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க நடவடிக்கை! -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Estimated read time 1 min read

மிக்ஜாம் புயலால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகளில் தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் (AIEMA)  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும்  நிதித்துறை அலுவலர்களையும் இன்று சந்தித்து அண்மையில் பெரும் சேதத்தை விளைவித்த மிக்ஜாம் புயலால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் குறிபுது எடுத்துரைத்தனர்.

அதையடுத்து, பொதுத்துறையைச் சேர்ந்த பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் #PSGIC உடனடியாக அதிகப்படியான சர்வேயர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டன. மேலும் உரிமைகோரல்களை எளிதாகவும் துரிதமாகவும் செயல்படுத்த அந்தந்த இடங்களில் சிறப்பு முகாம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது.

தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்குவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அந்தக் குழுவிடம் உறுதியளித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author