தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் 

Estimated read time 0 min read

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரி பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

மார்ச் 6ம் தேதி வரை விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்த நிலையில், அதை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான இது குறித்து இன்று விசாரிக்க உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author