NDA அரசாங்கத்தின் மந்திரம் “சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்” என்பதை இன்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, 17வது மக்களவை பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்று கூறினார்.
17வது மக்களவையின் கடைசி அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, 17வது மக்களவையின் உற்பத்தித்திறன் 97 சதவீதமாக இருந்ததாகவும், அதில் 30 மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
“அரசாங்கம் மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து எவ்வளவு விரைவாக வெளியேறுகிறதோ அவ்வளவு விரைவாக ஜனநாயகம் வலுப்பெறும்” என்று கூறிய பிரதமர், ‘குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆட்சி’ என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.