பெட்டி படுக்கையுடன் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்: உளவுத்துறை கூறுவது என்ன?

Estimated read time 1 min read

டெல்லியின் முக்கிய சாலைகளை விடுத்து தொலைதூர மற்றும் மோட்டார் அல்லாத எல்லைகளை பயன்படுத்தி விவசாயிகள் நுழைவர் என்று விவசாயிகளின் போராட்டம் 2.0 பற்றிய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி ஒரு பெரும் பேரணியை இன்று தொடங்கியுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை கோரி மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில், ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை இன்று விவசாயிகள் தொடங்கினர்.

விவசாயிகளின் போராட்டத்திற்காக பஞ்சாபிலிருந்து மட்டும் 1,500 டிராக்டர்கள் மற்றும் 500 வாகனங்கள் அணிதிரட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனங்களில் ஆறு மாதத்திற்கான உணவு, ரேஷன் பொருட்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author