உடல்நலக் குறைவு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தனது ஆஸ்தான தொகுதியான ரேபரேலி தொகுதி மக்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் இதை தெரிவித்தார்.
நேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் பின்னர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
“உடல்நலம் மற்றும் வயது மூப்பு காரணமாக, அடுத்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.
இந்த முடிவிற்குப் பிறகு, உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது.
ஆனால், நிச்சயமாக, என் இதயமும் ஆன்மாவும் எப்போதும் உங்களுடன் இருக்கும்” என்று சோனியா, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.