மக்களவையில் அமளி : 33 எம்பிக்கள் இடைநீக்கம்!

Estimated read time 1 min read

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட கனிமொழி, மாணிக்கம் தாகூர், நடராஜன், வெங்கடேசன், பெனி பெகன், முகமது ஜாவேத், ஸ்ரீகண்டன், ஓ பிரையன் உட்பட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை பலமுறை மக்களவை தலைவர் எச்சரித்தார். ஆனால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author