மத்திய பிரதேசத்தில் வல்லபபாய் படேல் சிலை இடிப்பு !

Estimated read time 0 min read

மத்திய பிரதேசத்தில், முன்னாள் துணை பிரதமர் வல்லபபாய் படேல் சிலை இடித்து அந்த இடத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை வைக்க வேண்டும் என ஒரு பிரிவினர் வலியுறுத்தினர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில், உஜ்ஜயின் மாவட்டத்தின் மேக்டோன் பகுதியில் முன்னாள் துணை பிரதமர் வல்லபபாய் படேல் சிலை நிறுவப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சிலையை அப்பகுதியை சேர்ந்த சில நபர்கள் டிராக்டரால் மோதி இடித்து தள்ளினர். மேலும் அவர்கள் அந்த இடத்தில் அம்பேத்கர் சிலையை வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது பற்றி அறிந்த மற்றொரு தரப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டனர். அந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டதை அடுத்து, வன்முறை கட்டுக்குள் வந்தது. ஆனாலும், பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், “படேல் சிலை நேற்று முன்தினம் நிறுவப்பட்டது. அந்த இடத்தில் அம்பேத்கர் சிலையை வைக்க விரும்பிய மற்றொரு தரப்பினர், படேல் சிலையை அகற்றியுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ” என தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author