மார்ச் மாதத்தில் உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!

Estimated read time 1 min read

மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மீண்டும் சாதனை வசூல் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரியை வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2024-மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது; இது கடந்த ஆண்டில் இதே மாதத்தை விட 11.5 சதவீதம் அதிகமாகும்; இது வரையிலான ஜிஎஸ்டி வசூலில் இது இரண்டாவது அதிக தொகையாகும்.

மார்ச் மாதத்தில் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் விவரம் வருமாறு:

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி): ரூ.34,532 கோடி

மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி): ரூ.43,746 கோடி

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி): இறக்குமதி செய்யப்ட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 40,322 கோடி உட்பட ரூ.87,947 கோடி

செஸ்: இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 996 கோடி உட்பட ரூ. 12,259 கோடி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 11,017 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ. 9,245 கோடி வருவாய் கிடைத்தது.

புதுச்சேரியை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.221 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 9 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதுச்சேரியில் ரூ.204 கோடி வருவாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author