மும்பைக்கு வெடி குண்டு மிரட்டல்

Estimated read time 0 min read

மும்பையில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல் அழைப்பு.

மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் போன் செய்து மும்பையின் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குண்டுகள் வெடிக்கும் என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போனில் பேசிய மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மும்பை நகர் முழுவதிலும் பாதுகாப்பையும் அதிகரித்துள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளை புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் இன்று மும்பை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாக காணப்படும். ஆனால் இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author