மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு!

Estimated read time 0 min read

மேகாலயாவில் இன்று நண்பகல் 12.42 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேகாலயாவில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. துரா பகுதியில் இன்று நண்பகல் 12.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது.

துராவிலிருந்து வடக்கே 71 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author