ராமர் இந்தியாவின் நம்பிக்கை… ராமர் இந்தியாவின் அடித்தளம்! – பிரதமர் மோடி

Estimated read time 1 min read

பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் வாழ வழிசெய்கிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.

ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தை ராமரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,

அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.

The first Ram Navami after the Pran Pratishtha in Ayodhya is a generational milestone, weaving together centuries of devotion with a new era of hope and progress. This is a day crores of Indians waited for. Innumerable people devoted their lives to this sacred cause.

May the… pic.twitter.com/2aJMLn1hhI

— Narendra Modi (@narendramodi) April 17, 2024

கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.

ராமர் இந்தியாவின் நம்பிக்கை. ராமர் இந்தியாவின் அடித்தளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

राम भारत की आस्था है, राम भारत का आधार है… pic.twitter.com/iyZm0ponNm

— Narendra Modi (@narendramodi) April 17, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author