லடாக்கில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு!

Estimated read time 0 min read

லடாக்கில் 3.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கார்கில் பகுதியில் இன்று மதியம் 2.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கார்கில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author