மும்பை மீரா சாலையில் உள்ள நாகநகரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு வழக்குகள் சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்புப் பிரச்சாரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மோதல் தொடங்கியது.
திங்கள்கிழமை காலை முதல் போலீஸார் அந்த இடத்தில் முகாமிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்படும். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் கமிஷனர் ஸ்ரீகாந்த் பதக் தெரிவித்துள்ளார்.