வட இந்தியாவுக்கு ரெட் அலர்ட்: அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி வரை உயரக்கூடும்

Estimated read time 1 min read

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உட்பட வட இந்தியாவில் பல மாநிலங்களில் வரவிருக்கும் கடுமையான வெப்ப அலைகள் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே 21 க்குப் பிறகு, மேற்கூறிய பிராந்தியங்களில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி உயர்ந்தது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மே 25-ஆம் தேதி வரை வெப்ப அலை முதல் கடுமையான வெப்ப அலை நிலைகள் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மே 24 வரை இதேபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author