விசா மோசடி வழக்கு : காா்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

Estimated read time 1 min read

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா பெறுவது தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார்.

பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா குழுமம் மின் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு சீன நிறுவனத்தைச் சோ்ந்த 263 பேரை இந்தியாவுக்கு வரவைக்க விதிகளை மீறி விசா பெறுவதற்காக காா்த்தி சிதம்பரத்துக்கு வேதாந்தா குழுமம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கார்த்தி  சிதம்பரம் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. மேலும் காா்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு நெருக்கமான நபரான பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 23ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லியில் உளள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.  கடந்த 2011ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author