பிப்ரவரி 29-ம் தேதி தங்களது ‘டெல்லி சலோ’ பேரணி குறித்த எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று விவசாயி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டங்களை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சா(அரசியல் அல்லாத) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா(கேஎம்எம்) ஆகிய அமைப்புகள் அடுத்த வாரத்திற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளன.
அதுவரை, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி ஆகிய இரு போராட்டத் தளங்களிலும் தங்கி இருந்து தங்கள் போராட்ட களத்தை தக்க வைத்துக்கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக முயற்சித்து வருகின்றனர்.