நாளை விவசாயிகள் அணிவகுப்பை முன்னிட்டு அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில், மார்ச் 12ஆம் தேதி வரை பெரிய கூட்டங்களுக்கு டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா பிறப்பித்த உத்தரவில், தேசிய தலைநகருக்குள் பேரணிகள் மற்றும் டிராக்டர்கள் நுழைவதற்கு தடை விதித்து, துப்பாக்கி மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்கள், செங்கல், கற்கள் போன்ற தற்காலிக ஆயுதங்கள், பெட்ரோல் கேன்கள் அல்லது சோடா பாட்டில்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பிப்ரவரி 13 அன்று டெல்லிக்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.