6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி

Estimated read time 0 min read

வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமரை தேர்ந்தெடுக்க இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மிகப்பெரிய தேசத்தை இப்படித்தான் வழிநடத்துதா என்றும் எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடும் ஒருவரால் தேசத்தை எப்படி ஆள முடியும் என்று கேட்ட பிரதமர், வலுவான தேசத்தைக் கட்டமைக்க வேண்டுமென்றால், வலிமையான பிரதமர் தேவை என்றும் குறிப்பிட்டார்.

இதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை வேண்டும் என்றும், ஆறுகட்டத் தேர்தலில் அதற்கான பெரும்பான்மையை தாம் பெற்றுவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author