திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொல்காப்பியர் விருது புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க தலைவர் வே. சிவராமகிருஷ்ணன், செயலாளர் மயில்வாகனன், பொருளாளர் முருகவேல், தொழிலதிபர் இரா. சிவக்குமார், ரோட்டரி கிளப் வீரராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் நெல்லை சுப்பையா தலைமையில் இன்றைய சூழலில் பெரிதும் போற்றப்படுவது பழமையா…! புதுமையா…! என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது.
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது
Estimated read time
0 min read