ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2!

Estimated read time 1 min read

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் நள்ளிரவு 12.39 மணியளவில், 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.39 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத் நகரில் இருந்து 132 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 4.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 153 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author