சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

Estimated read time 0 min read

சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு பரபரப்பான பொது பூங்காவிற்கு அவர்கள் சென்றிருந்த போது வெளிநாட்டினருக்கு எதிரான இந்த வன்முறைக் குற்றம் நடந்துள்ளது.
அயோவாவின் மவுண்ட் வெர்னனில் உள்ள தனியார் கலைக் கல்லூரியான கார்னெல் கல்லூரியின் கல்வியாளர்கள் திங்களன்று வடகிழக்கு சீனாவின் ஜிலின் நகரில் உள்ள பெய்ஹுவா பல்கலைக்கழகத்திற்கு வேலை விஷயமாக சென்றிருந்த போது இந்த கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
“அந்த நான்கு ஆசிரியர்களுடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சித்து வருகிறோம்.” என்று கூறிய கார்னெல் கல்லூரியின் தலைவர் ஜொனாதன் பிராண்ட், கத்திக்குத்து நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author