டோக்கியோ ஓடுபாதையில் விமானச் சிதைவுகள் – அகற்றல் தொடங்கியது

Estimated read time 1 min read

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி இன்று தொடங்கியது.

ஜப்பானின் TBS ஒளிபரப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) 2 விமானங்கள் மோதி தீப்பிடித்தது.

கடலோர காவல்படை விமானத்தில் பயணம் செய்த 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பான் ஏர்லைன்ஸ் JL516 என்ற மற்றொரு விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்க விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள் விமான பதிவு பெட்டிகளை ஆய்வு செய்ய உதவுவதாக தெரிவித்தனர்.

விபத்திற்கு முன் கடலோர காவல்படை விமானத்தை தாங்கள் பார்க்கவில்லை என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் தெரிவித்தனர்.

பயணிகள் விமானத்தின் 3 விமானிகளில் ஒருவர், மோதுவதற்கு சற்று முன்பு ஒரு பொருளைப் பார்த்ததாகக் கூறினார்.

மற்ற விமானிகளுடன் அவர் விவாதிக்கவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author