துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் விமான நிலையம் சுமார் அரை மணி நேரம் மூடப்பட்டு விமான போக்குவரத்தும் சிலமணி நேரம் நிறுத்தப்பட்டது.
துபாய் நகரம் முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருங்கடலைப் போல காட்சியளிக்கிறது.
சாலைகளில் மழை நீர் ஆறுகளை போல ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று 12 மணி நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100 மிமீ மழையும், 24 மணி நேரத்தில் மொத்தம் 160மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சராசரியாக, துபாய் நகரம் ஒரு வருடத்தில் 88.9மிமீ மழையை மட்டுமே பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.