பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் வெளிவந்தன.
இது குறித்து இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, படுகொலை பங்களாதேஷ் எம்பி அன்வருல் அசிம் அன்வரின் உடல், தோலுரிக்கப்பட்டு, எலும்புகள் துண்டுகளாக உடைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது பிணம் தூக்கி எறியப்பட்டுள்ளது என மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான ஜிஹாத் ஹவ்லதார், ஒரு கசாப்பு கடைக்காரர்.
அவர் வங்காளதேசத்தின் குல்னா மாவட்டத்தில் உள்ள பாரக்பூரில் வசிப்பவர் என்றும், சட்டவிரோதமாக மும்பையில் தங்கியிருந்ததாகவும் சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.